மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேலின் உடல் அடக்கம் செய்யும் பணிகள் தீவிரம்!

வெற்றிவேலை உடல் அடக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்ற நிலையில், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேலின் உடல் அடக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, மக்கள் அஞ்சலி செலுத்திய பின், ஓட்டேரி மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.