கீழடியில் அமையவுள்ள அருங்காட்சியகம்.. அடிக்கல் நாட்டவுள்ள முதல்வர்!
கீழடியில் உலகத்தரம் மிக்க அருங்காட்சியம் அமைக்க ரூ.12.25 கோடி ருபாய் ஒதுக்கிய நிலையில், நாளை காலை 10 மணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டவுள்ளார். சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் முதுமக்கள் தாழிகள், ஓடுகள், குவளைகள், நாணயங்கள், எலும்புக்கூடுகள், எடைக்கற்கள், சங்கு, … Read more