அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ உயிரை பறித்த விஷவண்டு!

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளரும், மனவெளி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இருந்தவர் புருஷோத்தமன். இந்நிலையில், புருஷோத்தமன் விழுப்புரம் மாவட்டம் ராதாபுரம் பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு சென்றுள்ளார். அவர் அங்கு சென்ற போது, விஷவண்டு கடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மயங்கி விழுந்த இவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.