முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்! பாலியல் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்கத்தில் தீவிர சமூக போராளியாக கருதப்படும் முகிலன் சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார். பின்னர் அவரை போலீசார் கண்டுபிடித்தனர். முகிலன் மீது ஒரு பெண் பாலியல் புகார் அளித்திருந்தால் முகிலன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதனை எதிர்த்து ஜாமீன் கேட்டு முகிலன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.