நமீபியாவிலிருந்து வந்த சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் விடுவித்த பிரதமர் மோடி

நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சீட்டா வகை 8 சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார் பிரதமர் மோடி. இந்தியாவில் ஆப்பிரிக்க சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 8 சிறுத்தைகள் நமீபியாவிலிருந்து வரவழைக்கப்படுவதாக மத்தியபிரதேச தலைமை வனப்பாதுகாவலர் ஜே.எஸ்.சௌஹான் தெரிவித்திருந்தார். அந்த 8 சிறுத்தைகள் இன்று காலை கார்கோ விமானம் மூலம் மத்திய பிரதேசத்தின் குவாலியருக்கு வந்தடைந்தது. சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் அவை சியோப்பூர் மாவட்டத்தில் உள்ள குனோ பால்பூர் தேசிய பூங்காவிற்கு வரவழைக்கப்பட்டது. … Read more