தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவின் உள்கட்டமைப்புகளை பயன்படுத்த அனுமதி!

தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவின் உள்கட்டமைப்புகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அணுசக்தி துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் அவர், இந்தியாவில் வேறு எங்கும் கிடைக்காத நேரத்தில் இஸ்ரோவில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படும் எனவும், இதற்காக ஒரு தொகை கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும், இஸ்ரோவுடன் இணைந்து விண்வெளி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய 500 நிறுவனங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். … Read more