இந்திய இராணுவ வீரர்கள் மரணம்..பாக் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

ஜம்மு: காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின், புர்கி பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து சென்றனர். அவர்கள் சென்ற கான்வாயை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த எதிர்பாராத தாக்குதலினால் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.