கல்விக் கொள்கை: மாநிலங்களின் கருத்து திறந்த மனதுடன் கேட்கப்படும் – பிரதமர் மோடி உரை.!
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மாநிலங்களின் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க மாநில ஆளுநர்கள் மாநாடு காணொளி வாயிலாக நடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் மோடி, கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மாநில கல்வி அமைச்சர்கள், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வித் துறை மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்றுள்ளார். மாநாடு தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். … Read more