ராமேஸ்வரத்தில் நாளை மீன்பிடிக்க அனுமதியில்லை – மீன்வளத்துறை

ராமேஸ்வரம், பாம்பன் பகுதி விசைப்படகுகளுக்கு நாளை மீன்பிடி அனுமதிசீட்டு வழங்கப்படாது என அறிவிப்பு. ராமேஸ்வரம், பாம்பன் பகுதி விசைப்படகுகளுக்கு நாளை மீன் பிடிக்க அனுமதியில்லை என்று தமிழக மீன்வளத்துறை அறிவித்துள்ளது. நாளை மீன்பிடி அனுமதிசீட்டு வழங்கப்படாது. கடலில் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், மீன்பிடிக்க அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்படகு மீனவர்களும் நாளை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.