திண்டுக்கல்லில் தாயும் மகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி

திண்டுக்கல் : வேடசந்தூர் பாளையம் அருகே, மகனை மீட்டு தரக்கோரி தாயும் மகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வான்ராயன்பட்டியை சேர்ந்த ஜெகஜோதி என்பவர் தனது மகன் குமரவேல் மைசூருக்கு வேலைக்கு போய் 3 மாதம் ஆகியும் என்ன நிலமை என தெரியவில்லை என்றும், மகனை வேலைக்கு அனுப்பிய புரோக்கர் மணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீ குளிக்க முயற்சி செய்தார்கள்.