ஆட்சி மாறுகிறதா ஆந்திராவில்? 142 இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலை ..!

இந்தியா முழுவது நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில், ஆந்திர சட்டப்பேரவை தொகுதியில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 142 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளு தெலுங்கு தேசம் கட்சி 28 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்