தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

தருமபுரம் ஆதின நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தி.க., திராவிடர் விடுதலை கழகம், விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரம் 27-வது ஆதின நிகழ்ச்சியில் பங்கேற்க ஆளுநர் ஆர்என் ரவி மயிலாடுதுறை சென்றுள்ளார். அங்கு ஆளுநர் செல்லும் வழி எங்கும், கருப்புக்கொடியை ஏந்தி பலரும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.