முறுக்கிக்கொண்டு சென்ற மாப்பிள்ளை திரும்பிவந்துவிட்டார் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!

தமிழக சட்டப்பேரவையில் இருந்து முறுக்கிக்கொண்டு சென்ற மாப்பிள்ளை திரும்பிவந்துவிட்டதாக, மு.க.ஸ்டாலினை, அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவினர் சட்டப்பேரவைக்கு மீண்டும் வந்திருப்பது வரவேற்கத்தக்கது என கூறினார். கர்நாடக முதலமைச்சரை, கமல்ஹாசன் சந்திப்பதால், எதுவும் நடக்காது எனத் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ஆளில்லாத கடையில் டீ ஆற்றுவதுபோல், டி.டி.வி.தினகரன் பேச்சு இருப்பதாகவும் விமர்சித்தார். உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்த நிலையிலும் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாமல் இருப்பது குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் பதில் அளிக்கவில்லை.