வரலாற்றில் இன்று(05.04.2020)…. கல்வி வள்ளல் அழகப்பா செட்டியார் மறைந்த தினம் இன்று….

சிவகங்கை மாவட்டம் , காரைக்குடிக்கு  அருகில் உள்ள கோட்டையூரில்  பிறந்த மகான் என்றும் காரைக்குடியின் கல்வி கடவுள், பல அறிஞர்களை உருவாக்கிய ஆசான் , கல்வி தந்தை எனபோற்றப்படுபவர் அழகப்பா செட்டியார் ஆவர். இவர், காரைக்குடியின் கோட்டையூரில் ஏப்ரல் மதம்  06ஆம் நாள்  1909ஆம் ஆஅண்டு  பிறந்தார், இவரது குடும்பம் மிகவும் பாரம்பரியமான நாட்டுகோட்டை நகரத்தார் சமுதாயம் , அவரது பள்ளி படிப்பு காரைக்குடியில் அமைந்து உள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் மேல் நிலை பள்ளியில் தொடக்க … Read more

வரலாற்றில் இன்று(30.03.2020)… இந்திய கவிஞர் ஆனந்த் பக்சி மறைந்த தினம் இன்று…

ஆனந்த் பக்சி அவர்கள் பாகிஸ்த்தானின் இராவல்பிண்டி நகரில் 1930 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் நாள் பிறந்தார்.இவரது படிப்பு  பாதியிலேயே நின்றது. பின், இவர் இந்திய கடற்படையில் 2 ஆண்டுகளும் இந்திய ராணுவத்தில் 6 ஆண்டுகளும் பணியாற்றினார். இந்தியா- பாக்கிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் லக்னோ வந்தார். பின் அவர், அங்கு ஒரு  டெலிபோன் ஆப்ரேட்டராக பணியாற்றினார். பின்னர் அவர் தலைநகர் டெல்லி சென்று மோட்டார் மெக்கானிக் வேலை செய்தார். இவருக்கு  சிறுவயதிலேயே கவிதை எழுதுவது … Read more

வரலாற்றில் இன்று(29.03.2020)… இந்திய பெண் எழுத்தாளர் பூபுல் செயகர் மறைந்ததினம் இன்று…

பூபுல் செயகர் என்பவர் இந்தியப் பெண் எழுத்தாளர், நூலாசிரியர் மற்றும் செயல்பாட்டாளர் ஆவார்.  இவர் செப்டெம்பர் மாதம் 11ஆம் நாள் 1915ஆம் ஆண்டு  உத்திரபிரதேச மாநிலம் இடாவா எனும் ஊரில் பிறந்தார். இவர், கிராமியக் கலைகள், கைத்தறிகள், கைவினைப் பொருள்கள் போன்றவற்றின் வளர்ச்சியில் ஆர்வத்துடன் வினையாற்றியவர். இந்தியத் தலைமை அமைச்சர்களான  நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோருடன் நெருங்கிய நட்புக் கொண்டு இருந்தார். தத்துவ அறிஞர் ஜே.கிருட்டினமூர்த்தி, பிரதமர் இந்திரா காந்தி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இந்திரா காந்திக்கும் இராஜீவ் … Read more

வரலாற்றில் இன்று(28.03.2020)… வேதாந்த மகரிஷி மறைந்த தினம் இன்று….

அனைவரும் அன்புசெலுத்தும் ஒருவர் என்ற ஒரு சிறந்த மனிதராக இர்ந்தவர் வேதாத்திரி மகரிஷி  அவர்கள் ஆவர். இவர், கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் நெசவுத் தொழில் செய்யும் வரதப்பன்,  முருகம்மாள் என்ற சின்னம்மாள் என்ற தம்பதியர்களுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். சிறுவயது முதலே வேதாத்திரி மகரிஷி அவரது தாயார் சின்னம்மாளிடம் நிறைய பக்திக் கதைகளையும், புராணக்கதைகளையும், பக்தி கீர்த்தனைகளையும் கற்றுக் கொண்டார். இவரது குடும்பச்சூழலில் இவருக்கு படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எனவே,  தன்னுடைய சொந்த ஊரில் மூன்றாவது … Read more

வரலாற்றில் இன்று(23.03.2020)…. இந்திய இளைஞர்களின் நாயகன் பகத்சிங் மறைந்த தினம் இன்று…

இந்திய சுதந்திரப் போராட்ட தலைவரும் பஞ்சாப்பின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட  லாலா லஜபத் ராய் மரணத்திற்கு காரணமான பிரிட்டிஷ் அதிகாரியை கொன்ற குற்றத்திற்காக பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோரை  தூக்கிலிட்ட தினம் வரலாற்றில்  இன்று. இந்திய இளைஞர்களின் மனதில் சுதந்திர போராட்ட சுடரை ஏற்றி அதை பெரும் காட்டுத்தீயாக  வளர்த்த  வீரர்களில் பகத் சிங் முக்கியமானவர். இவர் செப்டம்பர் மாதம்  28ஆம் நாள்  1907-ம் ஆண்டு, பாங்காவில் பிறந்தார்.  24 வயது இளைஞரான பகத் … Read more

வரலாற்றில் இன்று(19.03.2020)… காந்தியவாதி கிருபாளினி மறைந்த தினம் இன்று…

காந்தியத்தை  இந்தியா முழுவதும் பரப்பிய ஜீவித்ராம் பகவன்தாஸ் கிருபளானி அவர்கள் 1888ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  11ஆம் நாள்  சிந்து மாகாணத்தின் ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் தனது கல்லூரி வாழ்வில் ஒருமுறை அங்கு  படிக்கும்போது, ‘இந்தியர்கள் பொய்யர்கள்” என்று கூறியதற்காக மாணவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்தினார் என்பது மறக்க முடியாத ஒன்று. பின், இவர் மகாத்மா காந்தியடிகள்  நிறுவிய குஜராத் வித்யாபீடத்தின் முதல்வராக பணியாற்றினார். இவர் வாழ்நாள் முழுவதும் காந்தியவாதியாகவே திகழ்ந்தார் என்பாது குறிப்பிடத்தக்கது. … Read more

வரலாற்றில் இன்று(07.03.2020)… பல அன்ன சத்திரங்கள் நிறுவிய சரபோஜி மறைந்த தினம் இன்று…

இரண்டாம் சரபோஜி மாமன்னர், மராத்திய போன்சலே வம்சத்தைச் சேர்ந்த தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் மன்னர்களுள் ஒருவராவார். இவர் தஞ்சையின் பிரபலமான சரசுவதி மகால் நூலகத்தை அமைத்தார்.சரபோஜி மன்னர்  அழகிய தோற்றமும், சிறந்த வீரமும், உள்ளத்தில் நேர்மையும், ஒழுக்கமும் உடையவராக திகழ்ந்தார். இவர்,  கல்வியிலும், கலையிலும் சிறந்து விளங்கினார். இவர், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம்,இலத்தீன், வடமொழி, தெலுங்கு, தமிழ் முதலிய மொழிகளில் சிறந்து விளங்கினார். 1805 ஆம் ஆண்டு தேவநாகரி எழுத்தில்  ஓர் அச்சகத்தைத் தஞ்சையில் முதலில் ஏற்படுத்தினார். … Read more

வரலாற்றில் இன்று(25.02.2020)…. பிரபல கர்நாடக இசை கலைமாமணி மறைந்த தினம்…

கர்நாடக இசையில் மெய்மறக்க வைக்கும் சுகுணா புருசோத்தமன் அவர்கள் தமிழகத்தின்  சென்னையில் 1941ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது ஆரம்ப கால கர்நாடக இசையை ,முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர், திண்ணையம் வெங்கடராம ஐயர், பி. சாம்பமூர்த்தி ஆகியோரிடம் கற்றார். மேலும் இவர்,  லலிதாபாய் சாமண்ணாவிடம் வீணை வாசிப்பையும்  கற்றுக்கொண்டார்.பின் இவர், அனைத்திந்திய வானொலி, தூர்தர்சனில் உயர்தரக் கலைஞராக பணியாற்றினார். இந்தியாவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் மேடைக் கச்சேரிகள் செய்து தனது கர்நாடக இசயை வெளிப்படுத்தினார். கர்நாடக … Read more

வரலாற்றில் இன்று(23.02.2020)… கணித மேதை காஸ் மறைந்த தினம்…

கணித உலகத்திலேயே சிறந்த கணித வல்லுனர், எல்லாக் கால கணித இயலர்களுக்கும் சவாலாக விளங்கும், கணித மேதையான காஸ் குறித்த செய்தி தொகுப்பு.. இவர், ஐரோப்பாவின் ஜெர்மனியில்,  ஏப்ரல்மாதம்  30ஆம் நாள் 1777ஆம் ஆண்டு பிறந்தார். இவரது, தந்தை கெப்பார்ட், இவர்  ஒரு சாதாரண ஏழைத்தொழிலாளி. தாய் டொரொத்தியா கெப்பார்டுக்கு இரண்டாம் மனைவியாகும் முன் வீடுகள்தோறும் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தவர். கு சம்பளம் தரும்போது அவர் கணிப்பில் தவறு ஒன்றைக் கண்டுபிடித்தவன். இவர் கணிதம், இயற்பியல், … Read more

வரலாற்றில் இன்று(20.02.2020)… மகளீரின் முன்மாதிரி வை.மு.கோதைநாயகி அம்மாள் மறைந்த தினம் இன்று…

1901 ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி திருவல்லிக்கேணியில் நீர்வளூர் என்.எஸ். வெங்கடாச்சாரியார்-பட்டம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தவர் வை.மு.கோதைநாயகி.  கோதைக்கு ஒரு வயது இருக்கும் போது தன்னுடைய தாயை இழந்துவிட்டார். பாட்டி வேதவல்லியம்மாளிடமும் சித்தி  கனகம்மாளிடமும் வளர்ந்தார். சிறு வயது முதலே தன் சித்தப்பா திருத்தேரி ராகவாச்சாரியாரிடம் நாலடியார், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருவாய்மொழி முதலிய பல தமிழ் இலக்கியங்களைக் கற்றார். அக்காலத்தில் பெண்களை பள்ளிக்கு அனுப்பும் வழக்கம் இருந்ததில்லை. கோதையும் பள்ளி செல்லவில்லை. … Read more