“நீட் தொடர்ந்தால்..நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நிலைக்கு தமிழகம் திரும்பலாம்” -நீதிபதி ஏ.கே.ராஜன் குழு எச்சரிக்கை..!

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு கடந்த ஜூன் 10-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தது.இதனையடுத்து,பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு ஏ.கே.ராஜன் குழு,நீட் தேர்வால் என்ன பாதிப்பு என்பது குறித்த பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை முதல்வரிடம் … Read more