திண்டுக்கல்லில் பேருந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்றவருக்கு நிகழ்ந்த விபரீதம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த போது அதில் சிக்கி இருந்தவர்களுக்கு உதவச் சென்ற கேரள வியாபாரி, அதே இடத்தில் மற்றொரு பேருந்து விபத்துக்குள்ளானதில் உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்துகளில் வியாபாரி உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இன்று அதிகாலை கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவிலிருந்து பெங்களூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து வேடசந்தூர் அருகே தம்மனம்பட்டி தேசியநெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து … Read more