பெட்ரோல்,டீசல் விலை உயர்வு மக்களுக்கு பெரும் சுமை -ராகுல்காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெட்ரோல் விலை உயர்வு சாமான்ய மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. எனவே பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் மத்திய அரசுக்கு அதில் விருப்பம் இல்லை. மகா கூட்டணி அமைப்பது அரசியலுக்காக அல்ல. மக்கள் அனைவரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.