#T20WorldCup2022: இலங்கைக்கு எதிராக நமீபியா அணி அதிரடி ரன் குவிப்பு.!

டி-20 உலகக்கோப்பையில் நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்திருக்கிறது.

8 ஆவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதுகிறது. டாஸ் வென்று இலங்கை அணி, முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நமீபியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 163 ரன்களைக் குவித்திருக்கிறது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜான் ஃபிரைலின்க் 44 ரன்களும், ஜே.ஜே ஸ்மிட் 31 ரன்களும் குவித்தனர். இலங்கை அணியில் பிரமோத் மதுஷன் 4 ஓவர்கள் வீசி 37 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்கள் எடுத்தார்.

நமீபியா அணி, இலங்கை அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக  நிர்ணயித்திருக்கிறது.

author avatar
Muthu Kumar

Leave a Comment