டி-20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 157 ரன்கள் குவித்துள்ளது.
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி, தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும் 20 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி 62 ரன்களும், லோர்கன் டக்கர் 34 ரன்களும் குவித்தனர்.
இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்களும், லிவிங்ஸ்டன் 3 விக்கெட்களும் சாய்த்தனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற 158 ரன்களை அயர்லாந்து அணி நிர்ணயித்துள்ளது.