செக்கசிவந்த வானம் திரைபடத்தில் சூர்யாவா?! வெளியான புகைபடத்தால் படக்குழு அதிர்ச்சி!!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, அருண்விஜய், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் செக்கசிவந்த வானம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சென்றவாரம் ரிலீஸாகி 5மில்லியன் பார்வைய்ளர்களை கடந்து நல்லல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்திலையில் தற்போது இந்தபடத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகர் சூர்யா இடம்பெற்றிருந்தார். அதனை பார்த்தவுடன் ரசிகர்கள் சூர்யா அப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என கிளப்பிவிட்டனர். அவர் உண்மையிலேயே படத்தில் நடிக்கிறாரா? அல்லது அவரது மனைவி ஜோதிகா நடிப்பதை பார்க்க வந்தாரா என படம் வெளிவந்தால்தான் தெரியும். ஏற்கனவே சூர்யா மணிரத்னத்தின் ஆயுத எழுத்து படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment