ஏழை மாணவனின் கனவை நனவாக்கிய சூர்யா.! நெகிழ்ச்சி செய்தி.!

நடிகர் சூர்யா ஏழை மாணவனை தனது சொந்த செலவில் மருத்துவர் படிப்புக்கு படிக்க வைத்து மாணவனின் கனவை நனவாக்கியுள்ளார்.

நடிகர் சூர்யா பல படங்களில் நடித்து சிறந்து வழங்குவது மட்டுமில்லாமல் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கியும் சமூக பணிகளை செய்து வருகிறது. ஆம், சூர்யா அகரம் அறக்கட்டளை என்பதை 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, அதன் மூலம் தமிழகத்தில் படிக்க இயலாமல் கஷ்டப்படும் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியை கற்றுக் கொடுக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் பத்து வருடங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, அதில் நந்தகுமார் என்ற மாணவன் நல்ல மதிப்பெண்களை எடுத்தும் குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாமல் போனதாக கூறியுள்ளார். உடனே சூர்யா அவரது படிப்பு செலவுகள் அனைத்தையும் ஏற்று கொண்டு, மாணவனின் கனவான டாக்டர் படிப்பை படிக்க வைத்துள்ளார். தற்போது நந்தகுமார் தனது சொந்த ஊரான பெர‌ம்பலூ‌ரில் டாக்டராக பணியாற்றி வருகிறார். சூர்யாவின் உதவியால் ஒரு மாணவனின் கனவு நனவான சம்பவத்தை தொடர்ந்து சூர்யாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.