சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் ! தொடரும்  பிரார்த்தனைகள்

தமிழகம் முழுவதும் சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும்  என்று  மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
திருச்சியில்  நடுகாட்டுபட்டி என்ற  கிராமத்தில் நேற்று  சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தொடர்ந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் தமிழகம் முழுவதும் சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும்  என்று  மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.குறிப்பாக நாகூர் தர்க்காவில்  இஸ்லாமியர்கள்  சுர்ஜித்  நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று  பிரார்த்தனை செய்து வருகின்றனர்.மேலும் மதுரையில் 50-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.