கட்டாய வாக்களிப்பு பற்றிய பொதுநல வழக்கு! உச்சநீதிமன்றம் அதிரடி பதில்!

நம் நாட்டில் தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமில்லை. விருப்பம் இல்லையென்றால் வாக்களிக்க தேவையில்லை என்றுதான் இருந்து வருகிறது. இந்த வழக்கத்திற்கு எதிராக, கட்டாயமாக அனைவரும் வாக்களிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரபட்டது.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி இன்று விசாரிக்கையில், மத்திய அரசு சார்பில், வாக்களிப்பது தொடர்பான கோரிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையத்திடமே அளிக்க வேண்டும் என கூறியது. இதனை ஏற்று இந்த வழக்கை தள்ளுபடி செய்தது, உச்சநீதிமன்றம்!

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.