பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமாருக்கு சம்மன்!

பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் நாளை நேரில் ஆஜராக மத்திய குற்றப் பிரிவு போலீசார் சம்மன்.

பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் நாளை நேரில் ஆஜராக மத்திய குற்றப் பிரிவு, (சைபர் கிரைம் போலீசார்) சம்மன் அனுப்பியுள்ளனர். சமூக வலைத்தளத்தில் தமிழக அரசு பற்றி அவதூறாக பதிவிட்டதாக நிர்மல் குமார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் புகார் அளிக்கப்பட்டது. அதாவது, பிரதமர் மோடி பசும்பொன் வருவதாகவும், தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றும் நிர்மல்குமார் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

இதனால், கலகம் செய்ய தூண்டுதல், பொது அமைதிக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் மற்றும் வதந்தி பரப்புதல் போன்ற பிரிவுகள் கீழ் பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிர்மல் குமார் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று மத்திய குற்றப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment