24 மணி நேரத்தை கடந்து ஆழ்துளை கிணற்றுக்குள் போராடி வரும் சுஜித்!

ஆழ்துளைக் கிணற்றில் சுஜித் விழுந்து 24 மணி நேரமாகி விட்டது.
திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த  2 வயது சிறுவன் சுஜித்  ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.நேற்று  மாலை  5.40 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதனால் தமிழகம் முழுவதும் சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும்  என்று  மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரமாக ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை சுர்ஜித் பரிதவித்து வருகின்றான் .