கல்லூரியில் சரக்கடித்து மாணவிகள்…! 6 பேர் சஸ்பெண்ட்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் மாணவிகள் மது அருந்திய வீடியோ வைரலானதையடுத்து 6 பேர் சஸ்பெண்ட். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த கல்லூரியை சேர்ந்த மாணவிகள் குளிர்பானத்தில், சாராயத்தை கலந்து அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

இந்த வீடியோ அக்கல்லூரி முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து,  வீடியோவில் மதுபானம் அருந்தும் கல்லூரி மாணவிகளிடம் கல்லூரியின் முதல்வர் விசாரணை மேற்கொண்டார். அப்போது, அதே வகுப்பறையை சேர்ந்த மாணவன் ஒருவர் தங்களுக்கு மதுபானம் வாங்கித்  தாந்ததாகவும், மது என்று தெரிந்தே அருந்தியதாகவும் ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து, மது அருந்திய மாணவ மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து கல்லூரி முதல்வரை கண்டித்தார். அதுமட்டுமல்லாமல் ஒரு மாணவன் மற்றும் 5 மாணவிகள் உட்பட ஆறு பேரை முதல்வர் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.