நேருக்கு நேர் மோதிய கார்-பேருந்து..! 3 கல்லூரி மாணவர்கள் பலி..!

தனியார் பேருந்தும் காரும்  நேருக்கு நேர் மோதியதில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.  தூத்துக்குடி கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தும் காரும்  நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் மூன்று கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் காரில் சென்ற கீர்த்திக், அவரது நண்பர்கள் செந்தில்குமார், அஜய் ஆகியோர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்லூரியில் சரக்கடித்து மாணவிகள்…! 6 பேர் சஸ்பெண்ட்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் மாணவிகள் மது அருந்திய வீடியோ வைரலானதையடுத்து 6 பேர் சஸ்பெண்ட்.  காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த கல்லூரியை சேர்ந்த மாணவிகள் குளிர்பானத்தில், சாராயத்தை கலந்து அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்த வீடியோ அக்கல்லூரி முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. … Read more