குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம்- 300 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு

  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் மதுரையில் நடைபெற்றது.
  • போராட்டத்த்தில் பங்கேற்றதாக பங்கேற்றதாக வெங்கடேசன், நவாஸ்கனி உள்ளிட்ட 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஐக்கிய ஜமாத் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக  மதுரையில் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் எம்.பி.க்கள் வெங்கடேசன்,    நவாஸ்கனி மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதில் பங்கேற்றதாக வெங்கடேசன், நவாஸ்கனி உள்ளிட்ட 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.