இ-பாஸ் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை -சென்னை மாநகராட்சி ஆணையர்

இ-பாஸ் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் கே.பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,இ-பாஸ் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கனவே சென்னையில் இ-பாஸ் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இடைத்தரகர்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டும். சென்னையில் இதுவரை 1,20,000 பேருக்கு  இ-பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இ-பாஸ் பெறும் நடைமுறை மேலும் எளிதாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.