பங்குச்சந்தை சரிவு..! சென்செக்ஸ் 62,270 புள்ளிகளாக வர்த்தகம்..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 74.85 புள்ளிகள் உயர்ந்து 62,270 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,385 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

கடந்த வாரங்களில் சரிவுடன் தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் 2-வது நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் 62,474 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 74.85 புள்ளிகள் அல்லது 0.12% என சரிந்து 62,289 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 12.95 புள்ளிகள் அல்லது 0.070% சரிந்து 18,385 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 62,345 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,398 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோசிஸ் லிமிடெட், பஜாஜ் ஃபின்சர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே இந்தியா லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், HDFC வங்கி, பார்தி ஏர்டெல், மாருதி சுசுகி இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.