ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்.!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ்.

நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரிய மனு மீது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நீதிமதிகளை அவமதித்து பேசியதால் ஏன் அவமதிப்பு வழக்கை சந்திக்கக்கூடாது? என்று அரசு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்.எஸ். பாரதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்கில் இடைக்கால ஜாமீன் பெற்றிருக்கிறார். மேலும், வழக்கறிஞர் அந்தோணி என்பவர் ஆர்.எஸ். பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்