பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஸ்டாலினை சந்தித்தார் தெலுங்கானா முதல்வர்!

தற்போது மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில தினங்களில் மக்களவை தேர்தல் ரிசல்ட் வெளியாகிவிடும். இந்நிலையில் இந்தியஅரசியல் களமே பரபரப்பாக உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவை தேர்தலுக்கு முன்னர் அனைத்து எதிர்கட்சியையும் கூட்டி பெரிய அளவில் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.தற்போது தமிழக அரசியலில் திமுகவிற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளாதால், முக.ஸ்டாலினை பல அண்டை மாநிலங்களில் இருந்து முக்கிய அரசியல் தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.

ஏற்கனவே கேரளா முதல்வர் பிரனாயி விஜயன் சந்தித்த நிலையில் தற்போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அவர்களும் ஸ்டாலினை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு மற்ற கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment