ஜனநாயகத்தை படுகொலை செய்வதையே இலட்சியமாகக் கொண்ட பாஜக..ஸ்டாலின்.!

திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி ஜனநாயகத்தை படுகொலை செய்வதையே இலட்சியமாகக் கொண்ட மத்திய பாஜக அரசு அதனைப் புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்ததால் துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து முதல்வர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி ஜனநாயகத்தை படுகொலை செய்வதையே  இலட்சியமாகக் கொண்ட மத்திய பாஜக அரசு அதனைப் புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது. கிரண் பேடியைக் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகளைப் பறித்தது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் குதிரை பேரம் நடத்தினார்கள்.

தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை துணைநிலை ஆளுநரை நியமித்த போதே உள்நோக்கத்தை கண்டித்தேன். பாஜகவின் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும் சட்ட அத்துமீறல்களையும் பேரவையில் எடுத்துரைத்து ராஜினாமா செய்திருக்கிறார் நாராயணசாமி. ஜனநாயகம் காப்பதில் அவருடைய துணிச்சலை வாழ்த்துகிறேன்.

தமிழ்நாட்டில் அடிமை அதிமுகவை கைப்பாவையாக்கி ஆட்சி நடத்துவது போல, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மூலம் மறைமுக ஆட்சி நடத்திய முயற்சித்தால்  நீதிமன்றத்தில் எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் திமுக துணை நிற்கும். ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து திமுக- காங்கிரஸ் கூட்டணியை மக்கள் மன்றம் சொல்லும் என தெரிவித்துள்ளார்.

author avatar
murugan