நாளை SSLC தேர்வு.. நெல்லையில் 91 மையங்களில் தேர்வெழுதும் 22 ஆயிரம் மாணவர்கள்!

நாளை எஸ்எஸ்சி தேர்வு தொடங்க உள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் 22 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. மொத்தம் 12,639 பள்ளிகளை சேர்ந்த 9,76,089 மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத்தவுள்ளனர். நாளை தொடங்கும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு:

தமிழ்நாட்டில் 4,66,765 மாணவர்கள், 4,55,960 மாணவிகள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். புதுச்சேரியில் 7,911 மாணவர்கள், 7,655 மாணவிகள் பொதுத்தேர்வை எழுதுகின்றனர். தனித்தேர்வர்கள் 37,798 பேரும், மாற்று திறனாளிகள் 13,151 பேரும் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

நெல்லை மாவட்ட நிலவரம்:

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக தமிழ்நாட்டில் 3,976, தனியார் பள்ளிகளில் 180 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 287 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்காக 49 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நாளை 10-ஆம் வகுப்புக்கு எஸ்எஸ்சி தேர்வு தொடங்க உள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் 22 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

கைதிகளுக்கு தனி மையம்:

அதாவது, நெல்லை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 2 மாணவர்கள், 11 ஆயிரத்து 895 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 897 பேர் எழுதுகின்றனர். பொதுத்தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 91 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாளையக்கோட்டை மத்திய சிறையில் தேர்வு எழுதும் 12 சிறை கைதிகளுக்கு ஜெயில் வளாகத்தில் தனி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment