எல்லை தண்டி மீன்பிடித்ததாக 8 தமிழக மீனவர்கள் கைது.! இலங்கை கடற்படை நடவடிக்கை.!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுகோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கை கடற்படையினர், தமிழகம்  மற்றும் புதுசேரி காரைக்கால் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதம்பட்டி பகுதி மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், ஒரு அவர்கள் வந்த படகையும் இலங்கை கடற்படையினர், காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். அடுத்ததாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

இன்று தான் தமிழகம் மற்றும் புதுசேரி மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment