ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை..!

கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு.   

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். 10-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கற்கள், பாட்டில்களை எரிந்து விரட்டி அடித்ததாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படை வலையை வெட்டியதால் நஷ்டத்துடன் தமிழக மீனவர்கள் கரை திரும்பினர். இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தங்கள் மீது தாக்குதல் நடத்துவதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

author avatar
murugan