பாகிஸ்தானில் இலங்கை திட்டமிட்டபடி விளையாடும்- கிரிக்கெட் வாரியம்..!

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளன. இந்த தொடரில் பாதுகாப்புக் கருதி பங்கேற்கவில்லை என இலங்கை டி 20 அணியின் கேப்டன் மலிங்கா உட்பட 10 வீரர்கள் இலங்கை  கிரிக்கெட் வாரியத்திடம் கூறினார் .

இதையடுத்து இவர்கள் இல்லாமல் திரிமன்னா , துஷான் ஷனகா தலைமையில் ஒருநாள் மற்றும் டி20 அணிகளை இலங்கை  கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. 2009-ஆம் ஆண்டு பாகிஸ்தானில்  சுற்றுப்பயணம் செய்த போது அங்கிருந்த பயங்கரவாதிகள் இலங்கை வீரர்கள்  தாக்குதல் நடத்தினர். இதில் சில வீரர்கள் காயமடைந்தனர்.

இதை தொடர்ந்து  பாதுகாப்பு கருதி சர்வதேச அணிகள் பாகிஸ்தானில்  சென்று விளையாட மறுத்து வருகின்றனர். இந்நிலையில் திட்டமிட்டபடி இலங்கை அணி பாகிஸ்தானில்  பங்கேற்கும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு ஆபத்து ஏதும் நேராது என பாகிஸ்தான் அரசு உறுதியளித்ததை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

author avatar
murugan