இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: விசாரணை அதிகாரிகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர் -பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை அடையாளம் காணுவதில், விசாரணை அதிகாரிகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலி எண்ணிக்கை  320-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும் காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாகஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில்,இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை அடையாளம் காணுவதில், விசாரணை அதிகாரிகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். கிறைஸ்ட் சர்ச் தாக்குதலுக்கு பதிலடியாக குண்டுவெடிப்பு நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

Leave a Comment