இலங்கை நாடாளுமன்ற தேர்தல் – வாக்குப் பதிவு நிறைவு

இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளது.

இலங்கையில் கடந்த 2015-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்ற பதவிக்காலம் முடியும் முன் பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். கடந்த மார்ச் மாதம்  நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

நாடாளுமன்ற கலைக்கப்பட்டதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் தேர்தல் நடைபெறவில்லை 5 மாதங்களுக்கு பின் இலங்கையில் இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.காலை முதலே மக்கள் விறுவிறுப்பாக தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது  நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளது. இலங்கை முழுவதும் மாலை 4 மணி நிலவரப்படி 55% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.