இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: சென்னையில் 4 பேரிடம் விசாரணை

இலங்கையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னையில் 4-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 21 ஆம் தேதி இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலர்  உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.இதன் பின்னும் இலங்கையில் பதற்றம் குறைந்தபாடு இல்லை.தொடர்ந்து பதற்றநிலையிலே உள்ளது இலங்கை.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியுடன் தொடர்பில் இருந்ததாக, சென்னையில் 4 பேரிடம்,தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர் .பின் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment