பஞ்சாப்பின் பந்துவீச்சை பந்தாடிய வார்னர்! 213 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஹைதிராபாத்!

ஐபிஎல் போட்டி இன்றைய ஆட்டத்தில் சன் ரைஸர்ஸ் ஹைதிராபாத் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய ஹைதிராபாத் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய வார்னர் அதிகபட்சமாக 81 ரன்களும் , மனிஷ் பாண்டே 36 ரன்களும் , சஹா 28 ரன்களும்,நபி 20 ரன்கள் அடித்தும் விளையாடினர் இதனால் ஹைதிராபாத் அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட்டிற்கு, 212 ரன்கள் அடித்துள்ளது.

இதனால் 120 பந்துகளில் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்க உள்ளது பஞ்சாப் அணி.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment