இந்தியாவின் 9 நகரங்களில் பயன்பாட்டிற்கு வந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி..!

இந்தியாவில் சென்னை உட்பட 9 நகரங்களில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடியது. இதன் காரணமாக நாட்டில் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் பணி தீவிரமாக செயல்பட்டது. அதன்படி, ஜனவரி 16 ஆம் தேதி முதல் நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி துவங்கப்பட்டது.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிகளை செலுத்த அரசு அனுமதி அளித்தது. கோவாக்ஸின்  மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளே அதிமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி தடுப்பூசி மே 14 ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி 91.6% செயல்திறன் கொண்டது. மேலும், இந்த தடுப்பூசியை இந்திய நாட்டில் டாக்டர் ரெட்டி ஆய்வு நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த தடுப்பூசியை முதலில் ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் போடப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், பாடி, விசாகப்பட்டினம், கோலாப்பூர் மற்றும் மிரியலகுடா ஆகிய 9 நகரங்களில் கூடுதலாக பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்நகரங்களின் பிரபல தனியார் மருத்துவமனைகளில் போடப்படுகிறது. இதன் விலை ரூ.995.40 ஆகும்.