#Breaking :மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் அறிவிப்பு.!

இம்மாதம் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க வேண்டும் என மின்சாரத்துறை அறிவுறுத்திய நிலையில், தற்போதும் அதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இந்த சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரையில் நடைபெறும் எனவும் மின்சாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரையில் , மின் கட்டணம் செலுத்தும் மின் அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆதர் எண் மற்றும் மின் இணைப்பு எண் மட்டும் கொண்டு சென்றாலே போதும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment