சபரிமலைக்கு செல்ல இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை – பம்பை இடையே இன்று முதல் சிறப்பு விரைவு பேருந்துகள் இயக்கம்.

கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின்போது தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவம்பர் 17-ம் தேதி முதல் சிறப்பு விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், இந்த சிறப்பு பேருந்துகள் ஜனவரி 18-ஆம் தேதி வரை இயக்ககப்படும் என்றும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், பேருந்துகளில் இருக்ககைகளை www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment