பரபரக்கும் I.N.D.I.A ஆலோசனை கூட்டம்.! ராகுல் மற்றும் சோனியா காந்திக்கு பிரமாண்ட வரவேற்பு.!

வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை படு சுறுசுறுப்பாக ஆரம்பித்து செயல்படுத்தி வருகின்றன. கடந்த 2 முறை ஆட்சியை கைப்பற்றியுள்ள பலமான பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து  தேர்தல் கூட்டணியை அமைத்துள்ளன.

இந்தியா எனும் எதிர்கட்சிகள் கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. அடுத்ததாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் 2 நாட்கள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இன்று 3வது ஆலோசனை கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தற்போது தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இன்று காலையிலேயே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்பை சென்றார். அதனை தொடர்ந்து மற்ற அரசியல் தலைவர்களும் மும்பை வந்தடைந்தனர்.

தற்போது காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோரும் மும்பை வந்தடைந்துள்ளனர். அவர்களுக்கு மேள தாளங்கள் முழங்க பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.