#SLvIND: இந்தியாவிற்கு 263 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை..!

இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் எடுத்தனர்.

முதலில் இலங்கை அணியின் தொடக்க வீரராக அவிஷ்கா பெர்னாண்டோ,
மினாத் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து சிறப்பாக இருவரும் விளையாடி வந்தனர். அவிஷ்கா 32 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய பானுக ராஜபக்ச 24, தனஞ்சய் தி சில்வா 14 ரன்னில் விக்கெட்டை இழந்தனர்.

மத்தியில் களம் கண்ட  சரித் அசலங்கா, கேப்டன் தசுன் ஷானகா இருவரும் நிதானமாக விளையாட அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது. அவர்களின் கூட்டணி நிலைத்து நிற்கவில்லை. சரித் அசலங்கா 38, கேப்டன் தசுன் ஷானகா 39 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இறுதியாக இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில், சாஹல், தீபக் சஹர்,குல்தீப் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, குருனால் பாண்டியா தலா ஒரு விக்கெட்டை பறித்தனர். இந்திய அணிக்கு 263 ரன்கள் இலக்குடன் களமிறங்கவுள்ளது.

author avatar
murugan