பிக்பாஸ் பரணி தூக்கத்தை கெடுத்த 2 சம்பவம்..

பிக்பாஸ் மூலம் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றவர் பரணி. வெள்ளந்தி மனிதராக அறியப்பட்ட இவர் தற்போது நாடோடிகள் 2 உட்பட சிலபடங்களில் நடித்து வருகிறார்.

இவரிடம் உங்களை சமீபத்தில் கோபப்படுத்திய விஷயம் என்னவென்ற கேள்விக்கு இரண்டு சம்பவம் என்னை கோபப்படுத்தி சோகத்தை வரவைத்தது.

பாரம்பரிய நெல்லை பாதுகாத்து வைத்திருந்த நபர் ஒருவர் வேறுவழியின்றி அதை அடமானம் வைத்து குடும்பத்தை நடத்தவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம்.

இதைக்கேள்விப்பட்டு ஒரு விவசாயியின் நிலைமை இப்படி இருப்பதை கண்டு அன்று இரவு 3 மணிக்கு மேலாகியும் தூங்காமல் இருந்தேன்.

மற்றொரு சம்பவம் மரபணு மாற்றப்பட்ட விதையின் தீமையை சொன்ன அய்யாக்கண்ணுவை மோசமாக சித்தரித்த விஷயம் என்றார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment