படத்தின் ஷூட்டிங் முடியவே இல்லை! மீண்டும் அதே இயக்குனர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க பாண்டிராஜ் இயக்கி உள்ளார். அதனை, அடுத்து தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ எனும் படத்தில் சிவா நடித்து வருகிறார்.

இந்த படத்தை அடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை மூன்று கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மீண்டும் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படம் நடிக்க சம்மதித்துள்ளாராம்.  ஒரு பட ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே மீண்டும் அதே இளம் இயக்குனர் படத்தில் நடிக்க தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் சம்மதம் தெரிவித்தது, திரையுலகினருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் எ அளித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.