ஆணாக மாறி சலூன் கடை நடத்தும் சகோதரிகள்…!!

பெண் ஆணாக மாறி சலூன் கடை வைத்து சம்பாதித்து வந்த சகோதரிகளை உ.பி அரசு பாராட்டியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் துருவ் நாராயணன். சலூன் கடை வைத்து நடத்தி வந்தார்.தற்போது உடல் நலபாதிப்பால் படுத்த படுக்கையாக இருக்கும் துருவ் நாராயணனால் எந்த வேலையும் செய்ய முடியாது.இந்நிலையில் அவரின் குடும்பம் வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட்டு வந்தனர்.
துருவ் நாராயணன் குடும்பத்திற்கு சலூன் கடையை தவிர வேறு சொத்து கிடையாது. இந்நிலையில் வருமானத்துக்கு வழியின்றி திணறி வந்த குடும்பத்தை மீட்க அவரின் இரு மகள்கள் அப்பா நடத்தி வந்த சலூன் கடையை நடத்த ஆரம்பித்தனர்.தங்களிடம் ஆண்கள் தவறாக நடந்து கொள்வார்கள் , முடியை வெட்டிக்கொள்ள தயங்குவார்கள் என்று கருதிய இருவரும் தங்களை ஆண்கள் போல மாற்றி கொண்டனர்
இது குறித்து யோவர்கள் கூறும் போது , நாங்கள் அனைவரும் கேள் செய்வார்கள் என்று முதலில் தயங்கினோம் அனால் இன்று எங்களுக்கு தன்னம்பிக்கை வந்து விட்டது.வேலை செய்து கொண்டு தினமும் 400 சம்பாதிக்கிறோம் . கல்லூரி படிக்கின்றோம் என்று தெரிவித்தார்.இவர்களின் இந்த நிலைமையை அறிந்த அரசு அதிகாரிகள் அவர்களை பாராட்டியுள்ளனர்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment