ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் கால் இறுதி போட்டியில் சிந்து தோல்வி !

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி  டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து , ஜப்பான் வீராங்கனை அகானே யமா குச்சியை எதிர்த்து போட்டி இட்டார்.

இப்போட்டி 50 நிமிடம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பி.வி சிந்து 18 – 21 ,15 -21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்தார்.கடந்த வாரம் நடந்த இந்தோனேசியா ஓபன் இறுதிப் போட்டியில் அகானே யமா குச்சியிடம்  தோல்வி அடைந்தார்.

பி.வி சிந்து அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்த்தனர்.ஆனால்  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பிவி சிந்து ஏமாற்றினார்.

author avatar
murugan